கண்ணிமைக்கும் சிறு பொழுதில்
கண்கள் நான்கின் உரையாடல்
காணும் இடம் அத்தனையிலும்
காதலியின் முகம் தேடல்
காகிதம் ஒவ்வொன்றும்
கவிதைகளால் நிரம்பிடுதல்
கல்யாணம் ஆகும் வரை
காத்திருடா என வரம்பிடுதல்
கார்குழலில் விரல் நீவி
கண்ணயர உதவிடுதல்
காதலியின் நினைவினிலே
காத்திருந்து துயர்படுதல்
கண்மணியாம் அவளது
கரம் பற்ற ஏங்கிடுதல்
காற்று வெளி முழுவதிலும்
காதலியின் பெயர் எழுதுதல்
கவிதைக்கு பாடுபொருள்
காரிகையே என்றாதல்
காதலியே!! இத்தனைக்கும்
காரணம் நம் காதல்!!!!!
Monday, November 9, 2009
காதல் எனப்படுவது யாதெனின்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment