Monday, November 9, 2009

காதல் எனப்படுவது யாதெனின்...

கண்ணிமைக்கும் சிறு பொழுதில்
கண்கள் நான்கின் உரையாடல்
காணும் இடம் அத்தனையிலும்
காதலியின் முகம் தேடல்
காகிதம் ஒவ்வொன்றும்
கவிதைகளால் நிரம்பிடுதல்
கல்யாணம் ஆகும் வரை
காத்திருடா என வரம்பிடுதல்
கார்குழலில் விரல் நீவி
கண்ணயர உதவிடுதல்
காதலியின் நினைவினிலே
காத்திருந்து துயர்படுதல்
கண்மணியாம் அவளது
கரம் பற்ற ஏங்கிடுதல்
காற்று வெளி முழுவதிலும்
காதலியின் பெயர் எழுதுதல்
கவிதைக்கு பாடுபொருள்
காரிகையே என்றாதல்
காதலியே!! இத்தனைக்கும்
காரணம் நம் காதல்!!!!!


காதலெழுத்து

"எழுதி எழுதி
என்னத்த கண்ட
?"

மனசாட்சி என்னைக் கேட்டாலும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
எழுதிக் குவிக்கின்றேன்.

உள்ளுக்குள் போராட்டம்
ஓராயிரம்.

ஆனாலும் புடிச்சிருக்கு
அவளைப் பற்றி எழுதுவதற்கு

Saturday, October 31, 2009

இன்று முதல்....